பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா கொத்தணிகள் – மீண்டும் மூடப்படுகின்றன பாடசாலைகள்?

பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

“பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.

இதனால் சில இடங்களில் கொரோனா கொத்தணிகளும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதிகரித்துவரும் கொரோனா தொற்று பவலைக் கட்டுப்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகப் பிரிவினருடையதாகும்.

அதேபோன்று மாணவர்களும், பெற்றோருக்கும் இந்த பொறுப்பு காணப்படுகின்றது.

சுகாதார விதிமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுமாறு பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்தும் அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக பாடசாலைகளுக்குள் சுகாதார விதிமுறைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவது அத்தியாவசியமானதாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *