யாழ். மாநகர சபையின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்படவுள்ளது.
இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுநர் அருந்தவநாதன் அனோசனின் நிதி அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த குள கட்டுமானத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதுடன், மாதிரி ஒளிப்பட காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

