களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது!

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் தளபாட தொழிற்சாலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

களுத்துறை நகரசபைக்கு சொந்தமாக இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பலகைகளை களங்சியப்படுத்தும் பகுதியிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பெருந்தொகை பலகைகள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த விபத்தால் ஏற்பட்ட நட்டம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *