திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அனர்த்தம் இடம்பெற உடந்தையாக இருந்தார் என தெரிவித்தும் கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில், கைதான குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.