பெற்றோல் கடை தீப்பற்றி எரிந்து முற்றாக நாசம்: ஒருவர் காயம்!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ம் கட்டை சந்தியில் பெற்றோல் கடை ஒன்று தீப்பற்றியதில் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம் பெற்றுள்ளது.

குறித்த பெற்றோல் கடையின் உட்;பகுதியில் சோளக் கதிரை தீமூற்றி அடுப்பில் வைத்திருந்த நிலையில் பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

பிரதேச வாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில் கடை உரிமையாளரான இரு பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய எச்.எம்.சம்சுநிசா தீக்காயங்களுக்கு உள்ளானதில், தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிசார் சென்று விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மருதமுனையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *