தமிழ் கைதிகளின் ஆடைகளை கழற்றும் சிறை அதிகாரிகள்! சாள்ஸ் எம்பி

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மோசமான முறையில் பரிசோதனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற சபையில் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக, மகசின் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்கின்ற கைதிகள், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வருகின்ற கைதிகள் போன்ற அனைத்து கைதிகளையும் சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

இவ்வாறு சிறைச்சாலைக்குள் கைதிகளை சோதனை செய்யும் சிறை அதிகாரிகளின் செயலை இந்த உயரிய சபையில் என்னால் கூறமுடியாது உள்ளது.

தமிழ் கைதிகளின் முழு ஆடைகளையும் கழட்டி சிறை அதிகாரிகள் சோதனை செய்வதாக மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறு கீழ் தரமான, மனிதஉரிமை மீறலான சோதனையை சிறை அதிகாரிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *