அடுத்த ஆண்டில் புதிய அரச வேலை வாய்ப்பு இல்லை! அரசாங்கம் அறிவிப்பு

அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டன.

இதன் காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து வாகன இறக்குமதிக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, 2022ஆம் ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *