திருமலை – தம்பலகாமம் பகுதி கடையொன்றில் தீவிபத்து! காணொளி இணைப்பு

தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சிறிய கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள மீரா நகர் பகுதியில் கடையொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது, கடையில் இருந்த பெண்ணொருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குறித்த கடை பெட்ரோல் விற்பனை கடை என்பதால் தீ பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *