2022: பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெறவுள்ளது.

கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் 22ஆம்  திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குழுநிலை விவாதம் நிறைவுபெற்றதும் இன்று மாலை ஐந்து மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *