பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் குழுவொன்றினால் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு, இழப்பீடு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையும் பாகிஸ்தானும் கலந்துரையாடியுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்து நேற்று (வியாழக்கிழமை) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.