பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்!

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில், மீளுருவாக்கம் செய்வதற்கு தற்போது இலங்கை தொல்லியல் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தொல்லியல் ஆய்வு உத்தியோகஸ்த்தர் வி.மணிமாறனின் நெறிப்படுத்தலில், தொல்லியல் அதிகாரிகளின் மேற்பார்வையில், மீளுருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *