வவுனியாவில் குடும்பஸ்தர் மீது சரமாரி தாக்குதல்.! சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது அடையாளம் தெரியாத கும்பலொன்று சரமரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வாகனம் ஒன்று கொள்வனவு செய்யும் நோக்கில் வந்த குடும்பஸ்தர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இலக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பஸ்தர், வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மகேந்திரா வாகனத்தில் வந்த சிலர் மூர்க்கமாக தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிசாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த செவ்வாய்கிழமை வவுனியாவில் வாகனம் ஒன்று பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த சகாதேவன் சுதாகரன் வயது 34 வந்துள்ளார்.

வாகனத்தை பார்வையிட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவதற்கு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்திற்கு காத்திருந்தபோது, மகேந்திரா வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆறுபேர் கொண்ட குழுவினர் என்மீது சரமாரியான தாக்குதல் நடாத்திவிட்டு என்னிடம் இருந்த தங்க நகைகளையும் அபகரித்துக்கொண்டு செல்ல முற்பட்டனர்.

அதில் ஒருவர் என்னை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் எங்களை காட்டிக்கொடுத்தால் வைத்தியசாலையிலிருந்து திரும்ப வீடு செல்ல மாட்டாய் என்று அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர் .

எனவே என்னை கொலை செய்யும் நோக்கில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவே எனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது .

பொலிசார் சீ.சீ.ரிவி. காணொலியின் உதவியுடன் பக்கச்சார்பின்றிய விசாரணைகள் நடாத்தி சந்தேக நபர்களைக் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *