நாட்டில் முடங்கும் ரயில் சேவை – போராட்டத்தில் ஊழியர்கள்

ரயில் நிலைய அதிபர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு , திணைக்கள நிர்வாகம் உரிய தீர்வை வழங்கத் தவறியதை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்டேஷன் மாஸ்டர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ரயில்வேயின் முன்னாள் மற்றும் தற்போதைய பொது மேலாளர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடிவரும் நிலையில், நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சருடனும், புதிய போக்குவரத்து அமைச்சருடனும் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரச்சினைகளை விரைந்து தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் திணைக்கள நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ள போதிலும், இன்று வரை எந்த முடிவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *