வவுனியாவிலுள்ள பேரூந்துகளில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகளவில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்போது, அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பேரூந்தில் பெண்களுக்கு அருகேயுள்ள ஆசனத்தில் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்வதாகவும், சன நெரிசல் காணப்படுகின்ற சமயங்களில் பெண்களுடன் வேணுமென்றே உரசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபடும் இவ்வாறான ஓர் சில இளைஞர்களால் பல பெண்கள் வேலைக்கு செல்லுவதற்கு மாற்று வாகனங்களை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் சென்று இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது! சாணக்கியன்