பிரியந்தவிற்காக மன்னிப்புக்கோரிய பாகிஸ்தான்: அதே பண்பாடு இலங்கைக்கு இல்லை! சபையில் சிறீதரன் தெரிவிப்பு

பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மன்னிப்பு கோரியிருந்தார். இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் பண்பாடு இல்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்தகுமார மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த சம்பவம் போல் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த ரமேஸ் மெல்ல மெல்ல வெட்டிக்கொல்லப்பட்டார். இது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.

இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்களும் அந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டதையும், அது குறித்த படங்களும் வெளியாகியிருந்தன.

பிரியந்தவின் மரணத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மன்னிப்பு கோரியிருந்தார்.

எனினும், இலங்கையில் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டும் மன்னிப்பு கோரும் அந்த பண்பாடு இல்லையென அவர் தெரிவித்தார்.

எங்களை மதத் தீவிரவாதிகளாக முத்திரை குத்துகின்றனர்! ஞானசார தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *