எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த குழுவின் விசாரணைகள் நிறைவு!

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக  நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணைன தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த குழுவின் தலைவர் சாந்த வல்பலகே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த வாரத்திற்குள் குறித்த அறிக்கையை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள், களஞ்சியசாலை வளாகங்கள், எரிவாயு விநியோக நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *