குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து – மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

சிதறிய சடலங்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகிய இரண்டு வீரர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வீரர்களின் சடலங்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே விபத்தில் இறந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 வீரர்களின் சடலங்களை அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *