<!–
சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 989 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 44 ஆயிரத்து 294 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.