ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

<!–

ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர் – Athavan News

டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது.

இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்த விவசாயிகள், தங்கள் பொருட்களை டிரக்டர்களில் ஏற்றியதுடன், புறப்படுவதற்கு முன்னர் பஜனைப் பாடல்களைப் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *