புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு 5 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
எலுவாங்குளம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பஸ் வண்ணாத்திவில்லு பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு 5 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 16 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 11 பேரும் வண்ணாத்துவில்லு வைத்தியசாலையில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இருவர் படுகாயமடிந்துள்ளதாக பொலுஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வண்ணாத்துவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்