முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் சில முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்ககப்பட்டுள்ளது.
விமானப்படையினரின் தகவலுக்கமைய பொதுக்காணி ஒன்றில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, ரி82 வகை குண்டுகள் மூன்றும், ஜே.ஆர்வகை குண்டு ஒன்றும், தமிழன் குண்டு ஒன்றும், 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த குண்டுகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்த வேளை, குறித்த குண்டுகளை சிறப்பு அதிரடிப்படையினரிடம் கொடு;த்து செயலிழக்கம் செய்யுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.