நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின்பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி தேசிய மின் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் தினங்களில் நாளாந்தம் மாலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் விநியோகத் தடை நாட்டின் சில இடங்களில் பதிவாகும் என்று சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.