தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை – உறுதிப்படுத்தினார் மனோ!

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமையினை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆதவன் செய்திப்பிரிற்கு உறுதிப்படுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியன் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *