டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீசிய டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக, மாநிலத்தின் பல பாகங்களில், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட 110 பேரில் 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேஃபீல்டில் உள்ள பொலிஸ் நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை தீயணைப்பு வீரர்களின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *