<!–
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் மினிபஸ்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்தனர் என தலிபான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு நடந்த அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் இடம்பெற்ற மற்றொரு வெடிப்பில் ஒரு பெண் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.