யாழில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கலந்துரையாடல்!

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அரசியல் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்ரையாடலில், கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் பிரதி செயலாளர் திலகஸ்ரீ, கொழும்பு மாநகர சசை உறுப்பினர் ராஜிபாஸ்கர், கட்சியின் வடமாகாண தலைமை அமைப்பாளர் டேவிட் நவரட்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாக மாவட்ட ரீதியாக கட்சியை வலுவூட்டும் வகையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *