நத்தார் தினமன்று குடித்து குடித்து சாக வேண்டியது தான்: ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? ரஞ்சித் ஆண்டகை கேள்வி

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றியபோது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், நத்தார் தினமன்று மதுபானம் விற்பனை செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சால் அனுமதி பெற்றுக்கொண்ட ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

நல்லது தானே? நத்தாருக்கு குடித்து குடித்து சாக வேண்டியது தான். இதுவா ஆசியாவின் ஆச்சரியமா? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? நத்தார் பண்டிகையை இழிவுபடுத்துகின்றனர்.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர். வெசாக் பௌர்ணமிக்கு மதுபான விற்பனை தடையென்றால் நத்தார் பண்டிகையிலும் தடை செய்ய வேண்டும் என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றே தெரிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் எவரிடமும் விசாரணை செய்யப்படவில்லை. நாடகம் நடிக்கப்படுகின்றது.

எந்தவொரு அரசியல் தலைவரும் மத கொள்கைகளை விடவும் உயர்ந்தவர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எதற்காக வந்தது? பாதிக்கப்பட்ட மக்கள் குழப்பத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *