ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்தார் கோட்டா!

<!–

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்தார் கோட்டா! – Athavan News

நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நிறைவுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீள ஆரம்பமாகவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *