அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

தபால் ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து  32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதன்படி  இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் தொடங்கி நாளை நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள்  ஆகியவற்றினை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார கூறியுள்ளார்.

இதேவேளை இன்று காலை 10 மணியளவில் பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *