கிளிநொச்சியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

பூங்காவனம் சந்திப்பகுதியில் தனியார் காணி ஒன்றில் குழி ஒன்றை அமைத்தபோது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த குழியினுள் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையடு;த்து, நாளை அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *