இலங்கை – பங்களாதேஷ் பிரதமர்கள் தொலைபேசியில் பேச்சு!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனா ஆகியோருக்கு இடையே தொலைபேசி ஊடான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இலங்கையின் உண்மை மற்றும் நேர்மையான நண்பராக இருக்கும் பங்காளாதேஷுடனான வரலாற்று நட்பை மதிப்பதாகத் தான் பங்களாதேஷ் பிரதமரிடம் கூறியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தீர்வினை வழங்க ஜனாதிபதி மிகவும் ஆவலாக உள்ளார்! யோகேஸ்வரி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *