யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளர் ப.சுஜீவனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி 09 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியதனை தொடர்ந்தே பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்ககாக அழைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.