கொரோனாவின் மூன்றாம் அலையில் 60 கர்பிணிப் பெண்கள் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் 60 கர்ப்பிணித் தாய்மார்களும், 18 வயதுக்குட்பட்ட
89 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சிறுவர் சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களும் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *