கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்– அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு 6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர், நேற்று (திங்கட்கிழமை) மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து  யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது என இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் உயிரிழந்த குடும்பப்பெண்  கொரோனா தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

இந்நிலையில் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகன செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *