வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு போன்ற பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைக்காவிடின் பாரிய தொழில் சங்க நடவடிக்கைக்கு தயாராவோம் என வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *