வவுனியாவில் கோர விபத்து; படுகாயமடைந்த மதகுரு வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா குட்செட் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளும், குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் அருகே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையை சேர்ந்த 41 வயதுடைய கேதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *