சிங்கராஜா வனப்பகுதிக்குள் நுழைந்த இரு பெண்கள் மாயம்!

ஏலக்காய் விதைகளை சேகரிப்பதற்காக சிங்கராஜா வனப்பகுதிக்குள் நுழைந்த இருவர் காணாமல் போயுள்ளனர்.

39 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களே காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன பெண்கள் இருவரும் இட்டகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இருவரையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சூரியகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *