டொலர் இல்லை – இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சர் பசில்

டொலர் இல்லை – இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சர் பசில்

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று (13) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார். எவ்வாறாயினும் எரிபொருள், மருத்துவப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு அவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது வெற்றியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மெலும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று (13) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருத்துவப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு அவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது வெற்றியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மெலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *