இலங்கையில் மேலும் 1,783 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் கடந்த 11ஆம் திகதி வரையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கையே இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 75 ஆயிரத்து 432 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 15 ஆயிரத்து 358 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *