நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்றும் அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தரமற்ற அரசாங்கம் உள்ள நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும், தரமற்ற ஆட்சியை அகற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தையும் விவசாய மக்களின் வாழ்வையும் அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முகப்புத்தகத்தில் கார்த்திகை பூவை லைக் செய்த இளைஞனுக்கு பிணை!