திருகோணமலை – பிறீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சீனக்குடா – கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.