20 வயது யுவதி வன்புணர்வு: ஓய்வுபெற்ற வடக்கின் இராணுவ அதிகாரி மீது முறைப்பாடு!

வடமாகாணத்திற்குப் பொறுப்பான, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பாணந்துறையில் உள்ள வீடொன்றில் 20 வயதுடைய யுவதியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி, கடந்த ஓகஸ்ட் மாதம் தந்திரிமலையில் இருந்து இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும், எவரும் இல்லாத நேரத்தில் இராணுவ அதிகாரி பல தடவைகள் தன்னை வன்புணர்வு செய்துள்ளார் என்றும் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையை இழந்த குறித்த யுவதி தனது குடும்ப வறுமையால், பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

யுவதிக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் வைத்தியர் அவரிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வைத்தியர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பாணந்துறை தெற்கு காவல்துறை பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *