நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக சீனத் தூதுவர் வடக்கு விஜயம்!

சீனத்தூதுவர் கீ சென்ஹொங்இன்று யாழ்பாணத்திற்கு விஐயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்துள்ளது.

சீனாவின்தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று (புதன்கிழமை) வடக்கிற்கு விஐயம்செய்துள்ளார்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர்  அங்கிருந்து யாழ்நோக்கி பயணமனார்.

அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *