இரண்டவது இருபதுக்கு இருபது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டவது இருபதுக்கு இருபது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று கராச்சியில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றபெற்ற பாகிஸ்தான் அணி ம்முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ரிஸ்வான் 38 ஓட்டங்களையும் இப்திகார் அஹமட் ஓட்டங்களையும் 32 ஹைதர் அலி 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து 173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக பிராண்டன் கிங் 67 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்களையும் மொஹமட் நவாஸ், மொஹமட் வசிம் ஜூனியர், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *