முன்னாள் எம்பியின் செயலாளரை வீதியில் மறித்து விசாரணை செய்த ரிஐடியினர்

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரான கனகலிங்கம் சிறிமதனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர் அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (14) செவ்வாய்க்கிழமை இரவு 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

தனது வீடு நோக்கி வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக க.சிறிமதன் சென்றுள்ளார்.

இதன் போது இரவு 6.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தரித்து நின்ற சிவில் உடை தரித்த நால்வர் அவரை வழிமறித்துள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி தம்மை அடையாளப்படுத்தி வீதியில் வைத்து அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, கடந்த பத்தாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான காரணம், அவ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் யார்? ஒழுங்கமைத்தவர்கள் யார்? மற்றும் தற்போது சிவசக்தி ஆனந்தனால் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பில் தன்னிடம் தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் தான், அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக க.சிறிமதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *