ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (புதன்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டர் விபத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட் தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பயணித்த ஹெலிகொப்டர் அண்மையில்  விபத்துக்குள்ளாகிய நிலையில், அதில் பயணித்த அனைவருமே தற்போது உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *