நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார்: சாணக்கியன் பதில்!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவருடனான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என சாணக்கியன் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழ்.பொது நூலகத்தில் ‘இந்தியன் சென்ரரை’ பார்வையிட்ட சீன தூதுவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *