சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டினை மறுத்தது அரசாங்கம்!

சஹ்ரான் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறையினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மறுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *