முல்லைத்தீவில் 272 பேருக்கு இழப்பீட்டிற்கான காசோலைகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இழப்பீட்டுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில், மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 16 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் இன்று காலை 8 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதன்பின், காதர் மஸ்தானின் 2021 ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 14 முன்பள்ளிகளுக்கான சமையல் உபகரணங்களும் பாடசாலை, முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளன

துணுக்காய் பிரதேசத்தில் 22 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்டு, 15 முன்பள்ளிகளுக்கான சமையல் உபகரணங்களும் ஆலயம், முதியோர் இல்லங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளன

ஒட்டுசுட்டானில் 72 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்டு, பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளன

புதுக்குடியிருப்பில் 80 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து 12. 30 மணியளவில் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 82 பயனாளிகளுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு காசோலைகள் வழங்கப்பட்ட அதேவேளை இறுதி நிகழ்வுகள் 2.30 மணிக்கு நடைபெற்றுள்ளன

குறித்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் மற்றும் பிரதேச செயலகங்களின் உடைய ஊழியர்கள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *