மாநகர சபை…

மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் மீதான வழக்கு பெப்ரவரி மாதம் ஒத்தி வைப்பு!

வீதி பெயர் பலகை உடைத்ததாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் மீது தொடுக்ககப்பட்ட வழக்கு விசாரணை நேற்று கல்முனை நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டது. ஆறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில் கல்முனை மாநகரசபை கணக்காளரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதவான் வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி ஒன்பதாம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.

மா. ச உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித், மதிவதணன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *